சனி, 6 பிப்ரவரி, 2016

மகாமகத் திருவிழாவிற்கு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பிப்-22 ல் விடுமுறை

மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பிப்ரவரி 22ந் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படி இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வங்கிகள், தனியார் நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக