சனி, 6 பிப்ரவரி, 2016

விவேகானந்தர் குடந்தைக்கு விஜயம் செய்த விழா

ஆடுதுறை, பிப்-3, கும்பகோணம் பகுதியில் சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்த நாள் விழா நடந்தது.

வீரத்துறவி விவேகானந்தர் கடந்த 1897ல் சிகாகோவில் சொற்பொழிவாற்றிய பின் தாயகம் திரும்பிய போது பிப்ரவரி 3ம் தேதி கும்பகோணம் வந்தார். பக்தர்களின் சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் கும்பகோணத்தில் தங்கியிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க வேதாந்த பணி என்னும் சொற்பொழிவாற்றினார்.

அப்போது தான் எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்! என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு வழங்கினார்.

சோழமண்டலம் விவேகானந்த சேவா சங்கம் சார்பில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தரின் புத்தகங்கள், படங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


விரிவான செய்திக்குறிப்பு  - தினமலர் நாளிதழ் (06.02.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக