சனி, 6 பிப்ரவரி, 2016

பிளாஸ்டிக் இல்லா மகாமகம் - கல்லூரி மாணவ மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி

பிப்-4, மகாமகப் பெருவிழாவையொட்டி பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் இல்லா மகாமகம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள், அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் மாஸ் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் அலுவலர் ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் சாஸ்த்ரா பல்கலையில் இருந்து புறப்பட்டு காந்தி பூங்காவைச் சென்றடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புத்துறைப் பேராசிரியர்கள் வெங்கட்ராமன், பிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

விரிவான செய்திக்குறிப்பு - தின இதழ் நாளிதழ் (05-02-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக